
ஜின்னா சந்திப்பு
இதே நாளில்தான் (1940) தந்தை பெரியார் _ ஜனாப் ஜின்னா _ அண்ணல் அம்பேத்கர் சந்-திப்பு பம்பாயில் நடை-பெற்றது.
மாலை 5.30 மணி-முதல் 8.30 மணிவரை இந்தச் சந்திப்பு நடைபெற்-றது. சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம், ஜஸ்-டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி. நாதன், வழக்குரைஞர் கே.எம். பாலசுப்பிரமணி-யம், ஆகியோர் இந்தச் சந்-திப்பின்போது உடனி-ருந்-தனர்.
இந்தச் சந்திப்பு வர-லாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாட்டுப் பிரிவினை, இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, பார்ப்-பன எதிர்ப்பு என்பவை உரை-யாடலில் முக்கியமாக இடம் பெற்றன.
இந்தித் திணிப்பு என்-பது பார்ப்பன மதத்தையும், கலைகளையும் கருவிகளா-கக் கொண்டு விரிவுபடுத்-தும் குறுகிய நோக்கம் கொண்டது என்பது தெளிவு-படுத்தப்பட்டது.
இந்தி திணிப்பு குறித்து 1926 ஆம் ஆண்டிலேயே குடிஅரசு இதழில் (7.3.1926) தமிழிற்குத் துரோகமும், ஹிந்து மொழியின் இரகசியமும் என்ற தலைப்பிலேயே தந்தை பெரியார் எச்சரித்துள்ளார்.
இனி கொஞ்ச காலத்-திற்குள் இந்திப் பிரச்சாரத்-தின் பலனை நாம் அனு-பவிக்கப் போகிறோம். பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துக்-களில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். அதுபோலவே, 1931 இல் நன்னிலத்தில் நடைபெற்ற வட்டார சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்-மானம் நிறைவேற்றப்-பட்டது.
பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்-சிக்குப் பயன்படாத இந்தி, வடமொழி முதலிய மொழிகளை நமது மக்களைப் படிக்கும்படிச் செய்வது பார்ப்பனியத்-துக்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென இம்மாநாடு கருதுகிறது என்று தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் வெற்றி பெற்ற-போது, அதனைப் பாராட்டி முகம்மது அலி ஜின்னா தந்தி கொடுத்தார் என்-பதும் சிறப்புமிக்க வரலாற்-றுக் குறிப்பாகும்.
தந்தை பெரியார் அவர்-களின் கொள்கைகளை வர-வேற்ற ஜின்னா அவர்கள் இதர மாநிலங்களிலும் சுற்றுப் பயணம் மேற்-கொண்டு இந்தக் கொள்-கை-களைப் பரப்பவேண்-டும் என்று கேட்டுக்-கொண்-டார்.
அதுபோலவே, முகம்-மது அலி ஜின்னா அவர்-களும், பாபா சாகேப் அம்-பேத்கர் அவர்களும் 15 நாள்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வது என்றும் அந்தச் சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது.
பல வகைகளிலும் தலைவர்களுடன் தந்தை பெரியார் மேற்கொண்ட மும்பை சந்திப்பு முக்கியத்-துவம் வாய்ந்ததாகும்.
- மயிலாடன்