ஒரு வரிச் செய்திகள்
உலகில் பார்வை இழப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும் குளுக்கோமா நோயினால் இந்தியா வில் ஓராண்டில் 1.2 கோடிப் பேருக்கு பார்வை பறி போகி-றது என்று இந்திய குளுக்கோமா சங்கத் தலைவர் டாக்டர் சிறீ-தர் தெரிவித்துள்ளார்.
பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத் தொழில் நுட்பக் கழ-கத்திற்கு அய்.அய்.டி. அந்தஸ்து விரைவில் வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்-சிபல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்-றங்-களின் எண்ணிக்-கையை அதிகரிக்க வேண்டும் என்று அகில இந்திய பெண் வழக்கறிஞர்-களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்-ளது.
மகாராஷ்டிர நவ-நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே மீது வன்முறையைத் தூண்டியதாக மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்-களில் 73 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய கடல் எல் லைக்குள் விசைப் படகு மூலம் அத்து மீறி நுழைந்த அய்ந்து இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பென்னாகரம் இடைத் தேர்தலைக் கண்காணிக்க வட மாநிலங்களில் பணி யாற்றும் இரண்டு உயரதிகாரிகள் மேலி டப் பார்வையாளர் களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.
மதுரை அரவிந்த் கண்காப்பு அமைப்பு 2010 ஆம் ஆண்டிற் கான 15 லட்சம் டாலர் பரிசுத் தொகை யுடன் கூடிய ஹில் டன் மனிதநேய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவ னங்களுக்குக் கடன் வழங்குவதற்காக தேசிய கல்வி நிதிக் கழகத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் மாநிலங் களவையில் கூறியுள் ளார்.
ஆப்பிள் மலச் சிக்கலை நீக்கும்