யார் உண்மையான சங்கராச்சாரியார்? உத்தர்காண்ட் அரசு திணறல்
டேராடூன், மார்ச் 9_ ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறும் வேளையில் பல சங்கராச்சாரியார்-களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்சினை எழுந் துள்ளது. அதே வேளையில் ஏராளமான போலி சங்கராச்சாரியார்களும் கங்கைக் கரையில் உள்ள ஹரித்துவாரில் முளைத்துள்ளனராம்.
ஏராளமான சங்கராச்சாரியார்கள்
முக்கிய சங்கர பீடங்களுக்கு இணையாக ஏராளமான சங்கராச்சாரியார்கள் ஹரித்துவாரில் முகாமிட்டுள்ளனர். உத்தர்காண்ட் அரசு அமைத்-துள்ள மகா கும்பமேளா நிருவாகத்தினர் இவர்-களுக்கு முகாம்கள் அமைக்க இடம் அளித்துள்-ளன.
துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியாருடன் வந்துள்ள சாதுக்கள் இதற்கு ஆட்சேபம் தெரி-வித்து உள்ளனர். போலி சங்கராச்சாரியார்களுக்கு நிலம் அளிக்கப்பட்டதை எதிர்த்து தீக்குளிக்கப் போவதாக இவர்கள் கூறினர். துவாரகா பீடத்தின் ஸ்வரூபானந்துக்கு பல்வேறு சாதுக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து கும்பமேளா நிருவாகத்தின் கூடுதல் அதிகாரி வி.எஸ்.தனிக் இது பற்றி கூறும் போது, அரசானது பத்ரிநாத், பூரி, துவாரகா மற்றும் சிருங்கேரி பீடங்களின் சங்கராச்சாரி-யார்களை மட்டும் அங்கீகரித்துள்ளது. அதன்படி அவர்கள் நால்வருக்கும் அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன என்றார். அது பற்றிய கடிதம் ஒன்றையும் அவர் ஸ்வரூபானந்த சரஸ்-வதியின் சீடர்களிடம் அளித்துள்ளார்.