
பிள்ளை-யார்?
புத்தர் ஜெயந்தி நாளில் (மே 27) பிள்ளையாரை வீதிக்கு வீதி உடைத்து நொறுக்குங்கள் என்று சிதம்பரத்தையடுத்த வடக்கு-மாங்குடி பொதுக்கூட்டத்தில் அறிவித்தார் தந்தை பெரியார் (28.4.1953).
அதன்படி 27.5.1953 அன்று நாடெங்கும் பிள்-ளையார் பொம்மைகள் கருஞ்சட்டைத் தோழர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
கோயிலுக்குச் சென்று அந்தப் பிள்ளையாரை உடைக்கவேண்டாம்; மண் ணால் செய்து உடையுங் கள்; இரகசியமாக வேண் டாம்; புத்தர் ஜெயந்தி கொண்டாட என்று அனுமதி கேட்டு அந்தக் கூட்டத்தில் உடையுங்கள் என்று ஆணை பிறப்பித்தார் அய்யா (விடுதலை, 7.5.1953).
முதலமைச்சர் யார் தெரியுமா? சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் _ அவர் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
நாஸ்திகர்களிடமிருந்து இந்த நாட்டைக் காக்குமாறும், அறிவில்லாதவர்களுக்கு மதி விளக்கம் உண்டாகவேண்டு-மென்றும் யானைமுகனை அனைவரும் வேண்டிக்-கொள்ளவேண்டும் என்றும் கூறினார் முதலமைச்சர் ஆச்சாரியார்.
நாடெங்கும் பிள்ளை-யார் பொம்மைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. சென்னை-யில் அன்றைய மவுண்ட் ரோடு இந்து அலுவலகத்-திலிருந்து சுதேசிமித்திரன் அலுவலகம்வரை நடை-மேடைகளில் பிள்ளையார் பொம்மைகள் சுக்கல் நூறாக அடித்து நொறுக்கப்பட்டன.
திருச்சியில் டவுன் ஹாலில் தந்தை பெரியார் பேசினார். 15,000 மக்கள் பேரணியில் பங்கு கொண்-டனர். இலட்சோபலட்சம் மக்கள் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
புத்தர் போதனையும், பிள்ளையார் வணக்க சிறு-மையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்தப் போராட்டத்தை பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மறை-முகமாக வன்முறையைத் தூண்டினார் முதலமைச்சர். அதன் காரணமாக பல இடங்களில் கழகத் தோழர்-களைக் காலிகள் தாக்கினர்.
திருச்சி பெரியார் மாளி-கையைக் கொளுத்த முயன்ற காலியைக் கருஞ்-சட்டைத் தோழர்கள் கையும் களவுமாகப் பிடித்து-விட்-டனர்.
சில இடங்களில் தந்தை பெரியார் படங்களைக் கொளுத்தவும் செய்தனர். அது கண்டு 20 ஆம் நூற்-றாண்டின் இணையற்ற புத்தரான தந்தை பெரியார் அலட்சியப் புன்னகை செய்தார். அதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளி-யிட்டார். (விடுதலை, 29.5.1953).
என் படத்தைக் கொளுத்த நானே ரூபாய் 50 தருகி றேன். அவர்கள் கொளுத் தட்டும் - அந்த இடத்திற்கு யாரும் செல்லவேண்டாம். என் படத்தைக் கொளுத்தி யதாலேயே நான் செத்தா போய்விடுவேன்? என்று அறிக்கை விட்டு ஆச்சாரி-யா-ரின் ஆணவத்தை அடக்கினார்.
மதுரையில் திருவருள் நெறி மன்றத்தாரால் மதுரை முதல் வகுப்பு மாஜிஸ்தி-ரேட்டிடம் போராட்டத்தை எதிர்த்து வழக்கும் தொடுக்-கப்பட்டது. திருச்சி வீரபத்திர செட்டியார் என்பவரால் வழக்கும் தொடுக்கப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்டது.
பிள்ளையார் _ ஒரு பொம்மை; சக்தியாவது வெண்டைக்காயாவது என்ப-தைப் பக்தர்கள் உள்படப் பெரும்பாலானோர் புரிந்து-கொண்டனர்.
- மயிலாடன்